Friday, August 5, 2022

ஸௌராஷ்ட்ர கலாசாரம் மற்றும் பாரம்பரியம்

ஸௌராஷ்ட்ர கலாசாரம் மற்றும் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்.   நம் கலாச்சாரம், பாரம் பரியம், சம்பிரதாயம் இவற்றையெல்லாம் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். இதற்கு விடை வேண்டுமானால், பின்வரும் சான்றுகளிலிருந்து அறிந்துகொள்ளலாம். 

1930ல் திரு. குஜுவா சங்கர சர்மா எழுதிய "சாலி ஹோத்திர ஆபஸ்தம்ப ஸூத்திர பிரவர காண்டம்.

1951ல் விப்ரபந்து கு.வெ.பத்மநாபைய்யர் எழுதிய "கோத்ரு காண்டொ". 

மேற்கூறிய நூல்களிலிருந்து நாம் அறிவது என்ன வென்றால், நாம் கிருஷ்ண யஜுர் வேதம், ஆபஸ்தம்ப ஸூத்திரப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 64 கோத்திரங்கள் கொண்ட பிராம்மணர்கள் என்பது தான்.  

இதை மனதில் கொண்டு நம் ஸௌராஷ்ட்ர பிள்ளைகளுக்கு 7 வயதில் உபநயனம் செய்விக்க வேண்டும். (அறியா வயதான 7 வயதில் நம் பேச்சை பிள்ளைகள் கேட்பார்கள்)  

வசதி உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தனியாக உபநயனம் செய்விக்கலாம். வசதி இல்லாதவர்களுக்கு நம் ஆர்வமுள்ள நிருவனங்கள் ஸமஷ்டி உபநயனம் செய்து வைக்கலாம்.


நம் ஸௌராஷ்ட்ர பிராம்மண வைதீகர்களுக்கு (புரோஹிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள்) ஒரு அன்பான வேண்டுகோள்.
சம்ஸ்கிருதம் தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளவும். வேத மந்திரங்களை சரியாக உச்சரிக்க வேண்டும். இல்லையென்றால் அது மாற்று பலனைக் கொடுக்கும். தமிழ் எழுத்தில் சம்ஸ்கிருதம் படித்தாலும் சரியான உச்சரிப்பு வராது...... ஆகையால், சம்ஸ்கிருத தேவநாகரி எழுத்தில் கற்று படிக்கவும்.  


Wednesday, February 1, 2017

Saurashtra Rathasapthami -2024


Gregorian calendar 16th February -2023. 
Vyvasvatha Manvanthra, Kali yuga 5124th year, Magha month, Uttarayana punnya kaala,
Suklapaksha Sapthami, Sishira ruthu, is the day of “RATHA SAPTHAMI.
Tamil month Maasi  4th day, 

“RATHA SAPTHAMI”  is a very auspicious day for us Saurashtra people says the old and ancient palm leaf scriptures. What is so special about “RATHA SAPTHAMI”. “RATHA SAPTHAMI” is the birthday of Surya Bhagwan. That supreme Lord Sriman. Narayana himself was born as Surya Bhagwan to Maharishi. Kashyapa muni and Adhithi Devi says the puranas. 

16 பிப்ரவரி 2024.
வைவஸ்வத மன்வந்திரம், கலியப்தம் 5124 ஆம் வருடம், சோபகிருது ஆண்டு, மாக மாதம், உத்தராயண காலம், சிசிரருது, சுக்லபக்ஷ ஸப்தமி திதியில்  "ரத ஸப்தமி".
தமிழ்  மாசி மாதம் 4 ஆம் நாள்,  

நம் ஸௌராஷ்ர மக்களுக்கு மிக உத்தமமான, பவித்திரமான நாள் "ரத ஸப்தமி" என்று ஓலைச் சுவடிகள் கூறுகின்றன
"ரத ஸப்தமி" என்ற நாளில் அப்படி என்ன விசேஷம் இருக்கின்றது?
"ரத ஸப்தமி" என்பது சூர்ய ஜயந்தி. சூர்ய பகவானின் பிறந்த தினம். அந்த பரம்பொருளான ஶ்ரீமன்.நாராயணனே மஹரிஷி.காஷ்யப முனிவருக்கும் அதிதி தேவிக்கும், சூர்ய பகவானாக பிறந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

For more details see in the next post

"ரத ஸப்தமி" பவித்திரமான நாள்

நம் ஸௌராஷ்ர மக்களுக்கு மிக உத்தமமான, பவித்திரமான நாள் "ரத ஸப்தமி" என்று ஓலைச் சுவடிகள் கூறுகின்றன"ரத ஸப்தமி" என்ற நாளில் அப்படி என்ன விசேஷம் இருக்கின்றது?  




"ரத ஸப்தமி" என்பது சூர்ய ஜயந்தி. சூர்ய பகவானின் பிறந்த தினம். அந்த பரம்பொருளான ஶ்ரீமன்.நாராயணனே மஹரிஷி.காஷ்யப முனிவருக்கும் அதிதி தேவிக்கும், சூர்ய பகவானாக பிறந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

உழவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் (நெசவுத் தொழில் உள்பட) எல்லோருக்கும் இத்திருநாள் வரப்போகும் புது வருடத்தின் அறிகுறிஇது விரைவில் சைத்திர மாததில் வரப்பொகும் ஸௌராஷ்ட்ர மக்களின் வருடப்பிறப்பான உகாதியையும் குறிக்கின்றது. வசந்த காலத்தின் பிறப்பும் இன்று தான்.

இத்திருநாளில் தான் சூர்ய பகவான் அவரது தேரை மகர ரேகையிலிருந்து வடக்கு நோக்கி திருப்புகின்றார். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, கலியாப்தம் "மாக" மாததில், உத்தராயண புண்ய காலத்தில். சுக்ல பஷத்தில், அதாவது அமாவாசைக்குப் பிறகு "சப்தமி". அதாவது ஏழாவது நாள். அன்று தான் "ரத ஸப்தமி".

சூர்ய பகவானின் ரத சாரதி "ஆருணன்". அந்த ரதத்திற்கு ஏழு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும், அது வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கின்றது. அந்த ரதத்திற்கு பன்னிரண்டு சக்கரங்கள். அவை வருடத்தின் பன்னிரு சம்வத்சரங்களைக் குறிக்கின்றன. அதாவது மாதங்கள்.


"ரத ஸப்தமி". 
அன்றிலிருந்து ஐந்து நாட்கள் பீஷ்மபஞ்சகம்ரத ஸப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி ஆகிய ஐந்து நாட்களுமே பவித்திரமான நாட்கள்.  

பீஷ்மபஞ்சகத்தின் பெருமைகள் என்ன?
see next post. 

பீஷ்மபஞ்சகத்தின் பெருமைகள் என்ன?

மஹாபாரத யுத்தத்தில் அர்ஜுனனின் அம்புகளால் வீழ்த்தப்பட்ட பீஷ்ம பிதாமஹர், இச்சாமரண வரம் பெற்றவராகையால், தன் உயிரை விடுவதற்கு, அர்சுனன் அமைத்த அம்பு படுக்கையில் படுத்துக் கொண்டு, நல்ல நாளுக்காக காத்திருந்தார். ரத சப்தமியிலிருந்து நாலாவது நாள் வரும் ஏகாதசி மிகவும் உத்தமமான நாளாகையால், அன்று, ஶ்ரீ.கிருஷ்ண பரமாத்மா, பஞ்ச பாண்டவர்கள், மற்றும் பல மஹரிஷிகள் முன்னிலையில், தனது உயிரை அவர் பூத சரீரத்திலிருந்து பிரித்து மோக்ஷமடைந்தார். இதுவே பீஷ்ம ஏகாதசி.

ரத சப்தமி பூஜையின் சிறப்பு
see next post 

ரத சப்தமி பூஜையின் சிறப்பு -

காம்போஜ தேசத்து மன்னன் யஷோவர்மன் பல ஆண்டுகள் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தான். பல பூஜைகள் மற்றும் யாகங்கள் செய்தபின் அவனுக்கு ஒரு புத்திரன் பிறந்தான். ஆனால் பிறந்த குழந்தையோ மனநலம் குன்றியதாக இருந்தது.  குழந்தை பிறந்த நேரம், அவன் தேசத்தையும் பெரும் பஞ்சம் பீடித்துக் கொண்டது. மன்னனும் மக்களும் பெரும் கஷ்டத்துக்கு உள்ளானர்மன்னனும் மந்திரி ப்ரதானிகளும் அருகிலிருந்த ஆரண்யகத்தில் வசித்த ஒரு மஹரிஷியின் ஆசிரமத்திற்குச் சென்று, அவரை வணங்கி கஷ்டம் தீர வழி கேட்டனர்அவர் ஞானதிருஷ்டியினால் கண்டு பின்வருமாறு கூறினார்.  “மன்னா, உன் முன்னோர்களும் ப்ரஜைகளும் காலம் காலமாக அந்த பரமாத்மாவான ஶ்ரீமன்.நாராயணனை, சூர்யதேவன் ரூபத்தில் ரத சப்தமி நாள் அன்று வழிபட்டு வந்தனர். ஆனால், காலத்தின் கோலத்தால் நீயும் உன் ப்ரஜைகளும், இதை மறந்து இதர தேவதைகளை வணங்குகின்றீர்கள்.   அதனால் வந்த வினைதான் இதுமீண்டும் ரதசப்தமி பூஜையைத் தொடங்கி செய்வீர்களாக. உங்கள் எல்லோருக்கும் சுபிக்ஷம் உண்டாகும்.
மன்னனும் அவ்வாறே ரத சப்தமி பூஜையை நாடெங்கும் கொண்டாட உத்தரவிட்டான்தானும் ரத சப்தமி அன்று கோலாகலமாக பூஜை செய்தான்மன்னனின் மகனும் குணமடைந்தான். மழை பொழிந்து நாடும் சீரும் சிறப்புமாக ஆனது.

நம் ஸௌராஷ்ட்ர மக்களின் கதையும் இது தான் என்று நினைக்கின்றேன். பல ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்களும் "ரத சப்தமி அன்று பூஜையை சிறப்பாக கொண்டாடினார்கள் என்பதற்கு நிறைய சான்றுகள் இருக்கின்றன. இப்போது நாம் இந்த வழக்கத்தினை மறந்தவர்களாக இருக்கின்றோம்நாமும் மீண்டும் ரத சப்தமி பூஜையை சிறப்பாக செய்தால் நம் சமூகமும் சுபிக்ஷமடையும் என்பதில் சந்தேகமில்லை.  

பெருமாள் கோவில்களிலும் ரத சப்தமி
see next post for information - click on the older posts below to see next post

பெருமாள் கோவில்களிலும் ரத சப்தமி

நம் ஸௌராஷ்ட்ர மக்களோ பெரும்பாலும் வைஷ்ணவர்கள். நம் ஸௌராஷ்ட்ர கோவில்களோ பெரும்பாலும் வைஷ்ணவக் கோவில்கள். அப்படி இருக்க ரத சப்தமி கொண்டாடலாமா என்ற கேள்வியை பலர் எழுப்பக்கூடும். திருமலை திருப்பதியிலும் ரத சப்தமி அன்று ஶ்ரீ.வேங்கடேச பெருமாளுக்கு கோலாகலமாக, ஏக தின பிரம்மோத்ஸவம்” (ஒரு நாள் ப்ரம்மோத்ஸவம்) என்று கொண்டாடுகின்றனர்அன்று ஶ்ரீ.வேங்கடாசலபதி ஸ்வாமி, ஶ்ரீ.தேவி,  பூதேவி ஸமேதமாக, திருமலையின் மாட வீதிகளில், ஸப்த (ஏழு) வாஹனங்களில் பவனி வருவார்அதிகாலையில் சூர்யப் பிரபை வாஹனத்தில் தொடங்கும். பின், சேஷ வாஹனம், பின் கிரமேண கருட வாஹனம், ஹனுமான் வாஹனம், கல்பக விருஷ வாஹனம், சர்வபூபாள வாஹனம் என்று வந்து கடைசியில் ஏழாவதாக சந்திரப் பிரபை வாஹனத்தில் முடியும்.

ஶ்ரீரங்கம் மற்றும் இன்னும் பல பெருமாள் கோவில்களிலும் ரத சப்தமி அன்று விசேஷமாக கொண்டாடுகின்றனர்.

கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டை பெருமாள் கோவிலிலும் ரத சப்தமி அன்று மிகவும் சிறப்பாக சூர்யப் பிரபை வாஹனத்தில் பெருமாள் வீதி உலா வருவார்.